தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரபல ரவுடிகளின் புகைப்படத்துடன் தபால் தலைகள் - தபால் துறை விசாரணை - எனது அஞ்சல் தலை திட்டம்

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடிகளின் உருவப்படத்துடன் தபால் தலைகள் அச்சிடப்பட்டது தொடர்பாக, அம்மாநில தபால் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல ரவுடிகளின் புகைப்படங்களுடன் தபால் தலைகள்
பிரபல ரவுடிகளின் புகைப்படங்களுடன் தபால் தலைகள்

By

Published : Dec 28, 2020, 9:49 PM IST

லக்னோ:மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ரவுடி கும்பல் தலைவன் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் உருவப்படத்தை கொண்ட தபால் தலைகள் அச்சிடப்பட்டிருப்பது தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்ட தபால் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் எனது தபால் தலை (My Stamp) திட்டத்தின் கீழ், இந்தத் தபால் தலைகள் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தபால் தலை ஒன்றின் விலை 5 ரூபாயாகும். இதுதொடர்பான விசாரணையில், 600 ரூபாய் கட்டணம் செலுத்தி ரவுடிகளின் தபால் தலைகள் அச்சிடப்பட்டிப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகளின் தபால் தலைகள் அச்சிடப்பட்டதற்கு, தபால் துறையின் அலட்சியப்போக்கே காரணம் எனச் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் எனது தபால் தலை திட்டத்தின் கீழ், நபர் ஒருவர் அதற்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து, அதனை புகைப்படத்துடன் சேர்த்து தபால் துறைக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பப்படும் கோரிக்கை விண்ணப்பங்கள், மூன்றாம் நபருக்கோ, இந்திய தபால் துறைக்கோ, மத்திய அரசுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் இருந்தால் நிராகரிக்கப்படும்.

அதேபோல், அனுப்பப்படும் புகைப்படம் முறையாக இல்லை என்றால் அதனை நிராகரிக்கவும் தபால் துறைக்கு உரிமை உண்டு.

இதையும் படிங்க:உணவு ஆர்டர் செய்து 50 ஆயிரம் ரூபாயைப் பறிகொடுத்த பெண்: பெங்களூரில் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details