தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 3, 2020, 1:20 PM IST

ETV Bharat / bharat

சுட்டுக்கொல்லப்பட்டவரின் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளும் ஐஜி!

லக்னோ: குழந்தைகளைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தவரின் குழந்தையை கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் தத்தெடுத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Kanpur IG to adopt daughter of Subhash  who held 20 children hostage in UP
Kanpur IG to adopt daughter of Subhash who held 20 children hostage in UP

உத்தரப் பிரதேச மாநிலம் கார்சியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். இவரது ஒரு வயது குழந்தைக்கு ஜனவரி 30ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாட முடிவெடுத்துள்ளார். அதனால் வீட்டில் அருகில் வசிப்பவர்களைப் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக 20 குழந்தைகளும் சில பெண்களும் சுபாஷ் பாதமின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவ்வாறு வந்தவர்களை சுபாஷ் பாதாம் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், குழந்தைகளின் பெற்றோரிடம் குழந்தைகளை விடுவிக்க வேண்டுமென்றால் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் உள்ளார். இதனால் பதற்றமடைந்த அனைவரும் காவல் துறையினரிடம் புகாரளித்தனர்.

சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து அங்கு காவலர்கள் பலர் குவிக்கப்பட்டனர். மீட்புப் பணியில் ஈடுபட்டபோது காவலர்கள் மீது சுபாஷ் பாதம் கையெறி குண்டுகளை வீசியுள்ளார். மேலும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நிகழ்த்தியுள்ளார். கடும் போராட்டத்திற்குப் பின், சுபாஷ் பாதமை சுட்டு வீழ்த்தி அங்கிருந்த குழந்தைகளையும் பெண்களையும் காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இப்பிரச்னை முடிந்த அடுத்த நாளே, சுபாஷ் பாதமின் மனைவியான ரூபியை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ரூபி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழ்ந்தார். இதனால் அவர்களது ஒரு வயது குழந்தையான கௌரி தாய்தந்தையை இழந்தது. தாயையும் தந்தையையும் இழந்த அக்குழந்தையைக் காவல் துறையினர் பராமரித்துவந்தனர்.

இச்சூழலில், கான்பூர் ஐஜி மோகித் அகார்வால் அக்குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார். அக்குழந்தையை ஐபிஎஸ் அலுவலராக்குவேன் என்று உறுதியளித்துள்ள மோகித், தத்தெடுப்பதற்கான அனைத்து சட்டப்பூர்வமான நடைமுறைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளியின் குழந்தையை ஐஜி ஒருவர் தத்தெடுத்துக் கொள்ளும் அவரின் செயல் உத்தரப் பிரதேசம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் தலைமையிலான காவலர்கள் குழுவே சுபாஷ் பாதமை சுட்டுக்கொன்று குழந்தைகளை மீட்டது.

இதையும் படிங்க: இமாச்சலப் பிரதேசத்தில் இஸ்ரேலிய பயணி கைது

ABOUT THE AUTHOR

...view details