குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது குறித்து நடிகை கங்கனா, பேருந்துகள் ரயில்களை எரித்து நாட்டில் பதட்டமான சூழலை உருவாக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது. ஒரு பேருந்தின் விலை 80 லட்சம் ரூபாய் வரை இருக்கும், அது சிறிய தொகை அல்ல. நம் மக்களின் நிலை என்ன என்பதை கண்டிருக்கிறீர்களா? நம் நாட்டில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் மரணிக்கின்றனர். இதுபோன்ற சூழலில் வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல என தெரிவித்தார்.
மேலும் அவர், ஜனநாயகம் என்ற பெயரால் நாம் இன்னும் சுதந்திரத்துக்கு முந்தைய நிலையில்தான் இருக்கிறோம், நம் நாடு அடிமைத்தனமாக இருக்கிறது, நம்மை வற்புறுத்தியோ அல்லது துப்பாக்கி முனைகளிலோ மக்கள் காரியம் சாதித்து கொள்கின்றனர். போராட்டங்களில் ஈடுபடுவது, நாட்டை ஸ்தம்பிக்க செய்வது, வரி ஏய்ப்பு செய்வது போன்றவற்றில் ஈடுபடுவதை பெருமைகுரிய செயல்களாக கருதுகிறார்கள் . ஆனால் இன்றைய ஜனநாயகத்தில், உங்கள் தலைவர் உங்களில் ஒருவர். அவர் ஜப்பான் அல்லது சீனாவில் இருந்து வரவில்லை என்றார்.