உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்தப் புகார் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, பாப்டே, ரமணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.