ஜோத்பூர்: ஜோத்பூர் உட்பட இந்தியாவில் எல்லா இடங்களிலும் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. இருப்பினும், உலகளாவிய தொற்றுநோயைக் கருத்திற்கொண்டு, இந்த முறை 'ராவண் தஹான்' நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜோத்பூர் கோயிலில் ராவண வழிபாடு! - Dusshera
ராவணன் ஜோத்பூரில் மண்டோதரியை மணந்தான் என்று புராண கதைகள் உள்ளன. அந்த நேரத்தில் ராவணனுடன் ஊர்வலத்திற்கு வந்த சிலர் இங்கு குடியேறினர். ஸ்ரீமாலி கோதா பிராமணர் என்று அழைக்கப்படும் அவர்களின் சந்ததியினர் தற்போது ஜோத்பூரில் உள்ளனர்.
ராவணனை வழிபடும் கோயில்
ராவணின் சிறு உருவங்களை மட்டும் இந்த நிகழ்வில் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 'ராவண் தஹான்' மாலையில் நேரத்தில் நடத்தப்படும். பொய்யின் மீதான சத்தியத்தின் வெற்றியைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
ஆனால் ஜோத்பூரில் சிலர் 'ராவண் தஹான்' தினத்தை துக்க வடிவமாக கொண்டாடுகிறார்கள். அவர்கள் தங்களை ராவணனின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள்.
Last Updated : Oct 26, 2020, 10:09 AM IST