தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - காவல் ஆணையர் தகவல் - புல்வாம தாக்குதல்

ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வந்த 10 உள்ளூர் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் அளித்துள்ளது.

: Ten long operating terrorists killed in 20 days
: Ten long operating terrorists killed in 20 days

By

Published : Jan 22, 2020, 10:33 AM IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் கடந்த 20 நாட்களில் மட்டும் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல் ஆணையர் தில்பாக் சின் கூறுகையில், ' பொதுமக்கள் உயிருக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் பயங்கரவாதிகளை வெற்றிகரமாக ஒழித்துள்ளோம். ஜனவரி மாதம் இதுவரை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பத்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் ' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த திங்கட்கிழமை வச்சி பகுதில் மட்டும் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், புல்வாமா பகுதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து துப்பாக்கி, கன்னிவெடிகள் கைப்பற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிஏஏவுக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ABOUT THE AUTHOR

...view details