தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2021, 8:34 PM IST

ETV Bharat / bharat

டெல்லி விமான நிலையத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி கைது

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினருமான முனிப் சோஃபி என்பவரை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

JeM over-ground worker held at Delhi airport
டெல்லி விமான நிலையத்தில் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதி கைது

ஸ்ரீநகர்:கத்தாரிலிருந்து டெல்லி விமான நிலையம் வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த உயர் மட்ட தளபதி ஒருவரை கைது செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அனந்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த முனிப் சோஃபி என்றும் குல்காம் மாவட்ட காவலர்கள் இந்த கைது நடவடிக்கையைச் செய்துள்ளதாகவும் ஜம்மு - காஷ்மீர் மாநில காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் கொல்லப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த வலீத் பாய் என்பவருடன் இணைந்து முனிப் சோஃபி இயங்கியவர் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது

ABOUT THE AUTHOR

...view details