தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தூய்மை பாரதம் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட கிராமம் - kewal vihar colony

டேராடூன்: அரசின் உதவியைப் பெறாமல் பிளாஸ்டிக் ஒழிப்பில் நாட்டுக்கே முன்னுதாரணமாக கேவால் காலனி விளங்குகிறது.

Plastic
Plastic

By

Published : Jan 6, 2020, 2:35 PM IST

தூய்மை பாரதம் திட்டம் மூலம் ஈர்க்கப்பட்ட உத்தரகாண்ட் டேராடூன் மாவட்டத்திலுள்ள கேவால் விகார் காலனி மக்கள் சுத்தம் குறித்த ஆழ்ந்த விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுவருகின்றனர். குப்பைகள் பிரிக்கும் முறையை கேவால் விகார் காலனி சரியாக அமல்படுத்திவருகிறது. இந்த முயற்சியை வீட்டிலிருந்து தொடங்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குப்பைகளைப் பிரித்தெடுத்து, அதனை உரமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து காலினியில் வசிக்கும் ஆஷிஷ் கார்க், "அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகள் பிரிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அதனை உரமாக மாற்றி பயன்படுத்துகிறோம். ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளைச் சேகரித்து அதனைச் சாலை போடுவதற்கு மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியத்திற்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக்குகள் டீசலை உற்பத்திச் செய்யப் பயன்படுகிறது" என்றார்.

தூய்மை பாரதம் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட கிராமம்

ஆஷிஷின் இந்த முயற்சியை காலனி மக்கள் மேற்கொண்டு குப்பைகளைப் பிரித்து உரமாக மாற்றுவது மட்டுமில்லாமல், அதனைப் பயனுள்ளதாகவும் மாற்றுகின்றனர். பிளாஸ்டிக் இல்லா பகுதியாக உருவாக்கியதன் காரணமாக கிராம மக்களுக்கு சுத்தத்திற்கான பரிசை டூன் ஸ்மார்ட் சிட்டி வழங்கியுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கேவால் விகார் காலனி முன்மாதிரியாக விளங்குகிறது.

அரசு அமைப்புகளிலுள்ள குறைகளைக் கண்டறிந்து, அதனை விமர்சிப்பதற்குப் பதில் பிளாஸ்டிக் இல்லா நாடாக இந்தியாவை உருவாக்க குடிமக்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஆஷிஷ் கூறியுள்ளார். இந்த முயற்சி சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள பயன்படுவது மட்டுமில்லாமல் உலகைப் பாதுகாக்கவும் உதவும்.

இந்தக் காலனியில் வாழும் பெண்கள் பழைய பெட்ஷீட்களிலிருந்து 1500 துணிப்பைகளை செய்துள்ளனர். இதனைக் கடை வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள் ஆகியோருக்கு வழங்கி அவர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு 2 நாள்கள் மட்டும்தான் - தேவஸ்தானம் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details