ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக கடந்த ஆண்டு பிரி்க்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டார்.
துணைநிலை ஆளுநராக பத்து மாதங்கள் பணியாற்றிய ஜி.சி. முர்மு தனது பதவியை நேற்று (ஆக. 5) ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக ராஜீவ் மெஹரிஷியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அந்த பதவியில் கிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.