தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சமூக விரோதிகளுக்கு காங்கிரஸின் ஆதரவு - பாஜக சாடல் - பாஜக செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ்

டெல்லி : காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சமூக விரோதிகளுக்கே ஆதரவு தெரிவித்து வருவதாக பாஜக செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் சாடியுள்ளார்.

Narasimha Rao
Narasimha Rao

By

Published : Feb 17, 2020, 5:13 PM IST

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நூலகத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய வீடியோ வெளியாகி அனைவரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பாஜகவை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவிடம் கேட்டபொழுது, "வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்போது நாட்டின் பாதுகாப்புப் படையினர், காவல் துறையினருக்கு எதிராகக் குரல் எழுப்பிகிறது.

முகமூடி அணிந்துகொண்டு, கையில் கற்களை வைத்துக்கொண்டு பாடம் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு எந்தத் துறை கற்றுக்கொடுக்கிறது ?

நாட்டுக்கு கேடு விளைவிப்பவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கிறது. பாதுகாப்புப் படையினருக்கு எதிராக குரல் எழுப்புகிறது" என்றார்.

இதையும் படிங்க : வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியது ஏன்? பேரவையில் முதலமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details