ராஜஸ்தான் மாநிலம் பிரம்மபூரி பகுதியில் அஷ்பக், முன்னா, அபித் உள்ளிட்ட நான்கு பேர் சீட்டு விளையாடியுள்ளனர். விளையாட்டின் நடுவே தகராறு ஏற்பட அஷ்பக் என்பவரை மற்ற மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த அஷ்பக்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காவலர்கள், சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து முக்கியக் குற்றவாளி ஒருவரைக் கைதுசெய்தனர். மற்ற இருவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகியுள்ள அவர்களைத் தேடிவருகின்றனர்.