தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 17, 2020, 6:38 PM IST

ETV Bharat / bharat

இயல்பு நிலையை நோக்கி காஷ்மீர்?

ஸ்ரீநகர்: காஷ்மீரை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Kashmir
Kashmir

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதியை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து, அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

இதை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்பு சட்டத்தின்படி கருத்து சுதந்திரத்தின் ஒரு அங்கமாக இணைய சேவைகள் பார்க்கப்படுகிறது. மக்கள் அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொள்ளலாம். ஊடகம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தது.

பின்னர், சில தலைவர்களை மாநில அரசு விடுவித்தது. இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளைச் சேர்ந்த நான்கு முக்கிய தலைவர்கள் இன்று விடுதலையாகியுள்ளனர்.

இதையும் படிங்க: மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!

ABOUT THE AUTHOR

...view details