ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உளள அனந்த்நாக் பகுதியில் உள்ள கேபி சாலையில், இன்று மாலை சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதி ஒருவர், சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் சென்ற பேருந்தின் மீது துப்பாக்கியால் சரமாறியாக சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் ஐந்து சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்ரீநகரில் பயங்கரவாத தாக்குதல் - ஐந்து சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலி - ஐந்து சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் மீது பயங்கரவாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.
jammu
மேலும், இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதுங்கியுள்ள மற்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.