தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குல்காமில் பாதுகாப்பு படையினர் - பிரிவினைவாதிகள் மோதல் - காசிகுண்ட் நகரில் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

Encounter
Encounter

By

Published : Apr 27, 2020, 10:31 AM IST

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரை அடுத்துள்ள லோயர் முண்டா பகுதியில் நுழைந்த பிரிவினைவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்ததாகவும், இருதரப்பிற்கும் மோதல் தொடர்ந்து வருவதாக அவர் கூறினார்.

இப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காவலரைக் கடத்திய பிரிவினைவாதிகள்?

ABOUT THE AUTHOR

...view details