தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காணாமல்போன துணை உதவி ஆய்வாளரைத் தேடும் இந்தோ-திபெத்திய காவல் படையினர்! - கார் விபத்து

லக்னோ: ஹர்டோய் மருத்துவமனையிலிருந்து காணாமல் போன துணை உதவி ஆய்வாளரைத் தேடும் பணியில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

itbp-jawans-search-for-missing-asi-in-hardoi
itbp-jawans-search-for-missing-asi-in-hardoi

By

Published : Sep 7, 2020, 6:20 PM IST

இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களான ராகேஷ் சிங், பதம் சிங், பிரமோத் சிங், பிரதாப் சிங் ஆகியோர் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக உத்தரப் பிரதேசம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு வளைவில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதையடுத்து இவர்கள் அனைவரும், ஹார்டோய் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், துணை உதவி ஆய்வாளரான ராகேஷ் சிங் காணாமல் போய்விட்டதாக மருத்துவமனை தகவலளித்தது.

இதையடுத்து ராகேஷ் சிங்கை கண்டுபிடிக்க இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை படைவீரர்கள் குழு, ஹார்டோய் மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details