டெல்லி சத்தர்பூரில் உள்ள ராதா சோமி பியாஸ் கட்டடத்தில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் புதிய கரோனா மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையமானது இந்தோ-திபெத்திய எல்லைப் படை (Indo-Tibetan Border Police) சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், கரோனா மையத்திற்கு திடீரென்று வருகை தந்த இந்தோ-திபெத்திய எல்லை காவல் துறை இயக்குநர் எஸ்.எஸ்.தேஸ்வால், எல்லைப் படையின் சுகாதார வல்லுநர்கள் குழுவினருடனும் ஊழியர்களுடனும் உரையாடினார். மேலும் குறுகிய காலத்தில் கரோனா தடுப்பு மையத்தை தயார் நிலைக்கு கொண்டு வந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இந்த மையத்தின் நோடல் ஏஜன்சியாக பணியாற்ற இந்தோ-திபெத்திய எல்லைப் படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. எங்களுக்கு டெல்லி அரசு நிர்வாக ரீதியான உதவிகளை செய்தது. தேவையான உதவிகளை செய்ய மருத்துவர் குழுவுடன் அடங்கிய படை தயாராக உள்ளது.