நாட்டின் குடியுரிமை சட்டத்தில் பாஜக அரசு செய்திருக்கும் திருத்தத்தால் கடந்த மூன்று நாள்களில், வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகள் வன்முறைக்காடாக மாறி இருக்கும் நிலையில், இது குறித்து தனது கருத்துகளை மூத்த அரசியல்வாதியும் வழக்குரைஞருமான சல்மான் குர்ஷித் ஆலம் கான், மூத்த பத்திரிகையாளர் அமித் அக்னிஹோத்திரியிடம் இந்திய நாட்டை பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்த பரந்த அளவிலான தனது பார்வைகளை முன்வைக்கிறார்.
அந்த நேர்காணல் இதோ:
கேள்வி: முன்னெப்போதும் இல்லாத அளவில் டெல்லி வீதிகளில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. எதிர்ப்பாளார்கள் - ஆதரவாளர்கள் இடையே வன்முறை வெடித்தது. இந்த நிலைமை குறித்ததங்களது கண்ணோட்டம் என்ன?
பதில்: மிகவும் சோகமான ஒன்று இந்த வன்முறை. வழக்குரைஞராகிய நாங்களே இந்த அரசு எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் உள்ளோம். ஏனென்றால் அதனின் நோக்கம் முறையானதாகவோ சரியானதாகவோ இல்லை. நிலுவையில் உள்ள இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றம் எடுத்து முடிவுசெய்ய வேண்டும். நீதிமன்றம் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருந்தால், இந்த வன்முறை நிகழ்ந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. இந்த அரசு முற்றிலும் பொறுப்பற்றதாக மாறிவிட்டது. இந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாடாளுமன்றத்தில் அதீத பெரும்பான்மை உள்ளதால் கண்மூடித்தனமாக இந்த அரசு இப்படி சர்வாதிகாரமாகச் செயல்படுகிறது. ஒரு பொறுப்புள்ள அரசாக இருந்தால், இந்தக் கவலைக்கு இந்த அரசு தீர்வுகாண வேண்டும்.
கேள்வி: சி.ஏ.ஏ. எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையை மறிப்பதாகப் பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது...இதைப் பற்றி?
பதில்: ஆமாம். சிலரால் பொதுமக்களுக்கு போக்குவரத்தில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில நாள்களாக நாம் நம் கண்ணெதிரே கண்டது, அவர்கள் அரசை ஆதரிப்பவர்களாக இருப்பவர்கள் என்பதே. ஒரு கருத்தைக் கூறி அதனை ஏற்க வைக்க முயற்சிக்கும் மக்களால் ஏற்படும் முழுமையான ஆபத்து அவை. நீங்கள் அரசை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் வன்முறைத்தனமாகத் துப்பாக்கி ஏந்தியோ, வீடுகளைத் தீயிட்டு கொளுத்தியோ பொதுமக்களுக்கு சேதாரம் ஏற்படுத்துவது எவ்விதத்தில் நியாயம். அவை யாவும் கண்டிக்கத்தக்கது.
கேள்வி: இந்த வன்முறைக்கு எவரேனும் ஆதரவு தருகிறார்களா?
பதில்:இருக்கலாம்! குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். இதற்குப் பின்னணியில் அரசியல்வாதிகள் இல்லை. குடும்பம் குடும்பமாக வந்து மக்கள் பங்கேற்கும் இந்தப் போராட்டங்கள் என் பார்வையில், குடும்பங்களின் போராட்டமாகவே தெரிகிறது. இதில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கும் உண்டு. இதற்கு முன்பு இதுமாதிரியான ஒரு உன்னத அறவழிப் போராட்டங்களை நான் கண்டதில்லை.
கேள்வி: காங்கிரஸ் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. இந்திய மாநிலங்கள் பல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. அவற்றின் தற்போதைய சட்ட அங்கீகார நிலை என்ன ?
பதில்: இதற்கு இரண்டு வகையான பரிணாமங்கள் உண்டு. ஒன்று நீதிமன்றமே தகுந்த தீர்வுகாண வேண்டும். இன்னொன்று வன்முறை இல்லாத வகையில் மகாத்மா காந்தி, ஜுனியர் மார்ட்டின் லூதர், நெல்சன் மண்டேலா அவர்களின் வழியில் அமைதியான முறையில் போராடி தீர்வுகாண வேண்டும். சட்ட ஒழுங்கு முறையாக காப்பாற்றப்பட வேண்டும். இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு, மாநில அரசுகளின் கூட்டே இந்தக் கட்டமைப்பு.