இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இதுபோன்ற சூழ்நிலையில், கரோனா பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாக பொய்யான தகவல்களை மாநில அரசு கூறுவதற்குப் பதிலாக வெளிப்படையாக உண்மைகளைக் கூற முன்வர வேண்டும்.
தலைநகர் லக்னோவில் பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டு, கரோனா வைரஸுக்கு எதிராக, தடுப்புப்பணிகள் செய்வதாக பொய் கூறாமல், மக்கள் பணியாற்றவேண்டும். நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை, பாஜக அரசு பின்பற்ற வேண்டும்.