நாட்டின் உற்பத்தித் துறை குறித்து ஐ.எச்.எஸ். மார்கிட் இந்தியா மாதாந்திர கணக்கெடுப்பு ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், ஜூலை மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 46ஆக உள்ளது. ஆனால், கடந்த ஜூன் மாதத்தின் உற்பத்தி கொள்முதல் பிஎம்ஐ தரவு 47.2ஆக இருந்துள்ளது. ஒரே மாதத்தில் ஒரு விழுக்காடு உற்பத்தி குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் ஊரடங்கால் மக்களுக்குத் தேவை நிலை இல்லாதது உருவானதும், நிறுவனங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையும், பயனர்களின் எண்ணிக்கையும் குறைந்ததும்தான் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ஐஎச்எஸ் மார்க்கிட்டின் பொருளாதார நிபுணர் எலியட் கெர் கூறுகையில், "இந்திய உற்பத்தியாளர்களின் சமீபத்திய பிஎம்ஐ தரவு, கோவிட்-19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார நிலைமையை வெளிக்காட்டுகிறது. கணக்கெடுப்பு முடிவுகள் உற்பத்தி மற்றும் புதிய ஆர்டர்களின் வீழ்ச்சியைக் சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.