தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 3:56 PM IST

ETV Bharat / bharat

இந்தியாவில் 19 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

டெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

ரோனா
கரோனா

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தைத் தாண்டுகிறது. வைரஸைக் கட்டுபடுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 8 ஆயிரத்து 254ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 795ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 57 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 2 லட்சத்து 68 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details