"இந்தியா - சீனா நாடுகளுக்கிடையே போர் நிகழும் என கணிக்கப்பட்டால், அது தவறு இரு நாடுகளுக்கிடையே போருக்கான சாத்தியக்கூறுகள் குறைவு" என சின்ஹா கூறுனார். கல்வான் பள்ளத்தாக்கை பாதுகாக்கும்போது தயார் நிலையில் இல்லாத இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் எட்டு மணி நேரம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இதன் விளைவாக, கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் பிகார் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாட்டு உறவை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.
"இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், சீண்டினால் தேவைப்படும் நேரத்தில் தக்க பதிலடி தரப்படும். அதற்கான திறன் எங்களிடம் உள்ளது" என மோடி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட சீனாவின் தாக்குதலுக்கு எதிராக மக்களின் மனநிலை கொந்தளித்தது. ஆனால், இரு நாட்டு தலைவர்களும் போரை விரும்ப மாட்டார்கள் என சின்ஹா கூறுகிறார்.
இது குறித்து மேலும் கூறிய சின்ஹா, "போர் நிகழ்ந்தால் பொருளாதாரம் மோசமடையும். ஆட்சி மாற்றம் மட்டுமின்றி பல காட்சிகள் அரங்கேறும். இதைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் சரி, சீனாவும் சரி போருக்கு ஆதரவு தெரிவிக்காது. சீனாவில் போர் மிரட்டல் உண்மையானது அல்ல. ஏனெனில், தங்களின் குழந்தைகள் போர் மூலம் இறப்பதை அங்குள்ள குடும்பங்கள் விரும்பாது. இந்த விவகாரத்தில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ராணுவம் சிறப்பாகவே செயல்படுகிறது. 1962ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற போர்களில் இந்தியா தக்க பதிலடியையே தந்துள்ளது.