இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக இருநாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு குவித்துள்ளன.
இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பு குறித்து ராணுவத் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், கடந்த திங்கள்கிழமை (ஜூன் 15) இரவு இருதரப்பினருக்கும் இடையே திடீரென வன்முறை வெடித்தது.
கிட்டத்தட்ட 6-7 மணி நேரம் நடந்த இந்த மோதலில், இந்திய தரப்பைச் சேர்ந்த 20 வீரர்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலின் போது தங்களை விட, சீன ராணுவத்தினர் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் இருந்ததாக இந்திய ராணுவ அலுவலர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "கல்வானில் நாங்கள் தாக்கப்பட்டபோது எங்களை விட சீன ராணுவத்தினர் மிக அதிக அளவில் இருந்தனர். ஒப்பீட்டு அளவில் ஒரு இந்திய வீரருக்கு அவர்களிடம் ஐந்து வீரர்கள் இருந்தனர். இருப்பினும், அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து சண்டையிட்டோம்.