இயந்திரக் கற்றல் திறன்கொண்டு மூளையின் செயல்பாடுகளை 98 விழுக்காடு அளவுக்கு துல்லியமாகக் கணிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒவ்வொரு கட்டிக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. எம்.ஆர்.ஐ. போன்ற சோதனைக் கருவிகள் மூலம் தகவல்களைத் திரட்ட மருத்துவர்கள் பெரும் பாடுபட வேண்டும்.
காரணம் ஒவ்வொன்றின் தன்மையிலும் பல வேறுபாடுகள் இருக்கும். இதனை எளிதில் கணிக்க தற்போது செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயின் தன்மை விரைந்து அறியப்பட்டு, சிகிச்சை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.