கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அப்போது சரக்கு ரயில்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், கூடுதலாக 80 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது.
நாளை (செப்.12) முதல் இயக்கப்படவுள்ள இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நேற்று (செப்.10) தொடங்கியது.