தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரபல மலபார் கடற்படை பயிற்சி... ஆஸ்திரேலியாவை அழைப்பதில் தயக்கம் காட்டும் இந்தியா! - மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா

டெல்லி: பிரபலமான மலபார் கடற்படை பயிற்சிக்கு, ஆஸ்திரேலியா நாட்டை அழைக்கலாமா வேண்டாமா என்ற இந்தியாவின் குழப்பத்திற்கான மூன்று காரணங்களை மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா விவரித்துள்ளார்.

மலபார்
மலபார்

By

Published : Jul 19, 2020, 11:37 PM IST

மலபார் கடற்படை பயிற்சி இந்தியா, அமெரிக்கா நாடுகளுக்கிடையே கடந்த 1992ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, 2005ஆம் ஆண்டில் ஜப்பான் நாடு மலபார் பயிற்சியில் நிரந்தர உறுப்பினராக இணைத்துக்கொண்டது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக இணைந்தனர். இது சீனாவிற்கு சிறிது கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் மலபார் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தாண்டு ஆஸ்திரேலியாவை அழைக்கலாமா வேண்டாமா என்ற பேச்சு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ராணுவத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியா நாடு அழைக்கப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக இறுதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு முடிவெடுக்க இந்திய கடற்படை, பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், பின்னர் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் என பல்வேறு கட்டங்கள் உள்ளன. தற்போது, இப்பிரச்னையில் இரண்டாம் கட்டத்தில் உள்ளோம். கடைசி முடிவு அரசியல் தலைவர்களின் கையில்தான் உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் பணிபுரிவதில் இந்திய கடற்படைக்கு எந்த தயக்கமும் இல்லை. ஏற்கனவே, ஆசிண்டெக்ஸ் கடற்பயிற்சியில் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஜப்பானும் ஆஸ்திரேலியாவுடன் பயற்சியில் ஈடுபடுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்தபோதிலும், இந்தியா அழைப்பதற்கு சிறிது தயக்கம் காட்டிவருவதைப் பார்க்க முடிகிறது. இந்த தயக்கத்திற்கான மூன்று காரணங்களை மூத்த பத்திரிகையாளர் சஞ்சிப் கே.ஆர்.பருவா விவரித்துள்ளார்.

முதலாவது, நான்கு நாடுகளின் குவாட் அமைப்பிற்கு சீனா இதுவரை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது எல்லை பதற்றம் காரணமாக போராட்டங்களும், எதிர்ப்புகளும் வர அதிக வாய்ப்புள்ளது. எல்லையில் உயர்மட்ட ராணுவ அலுவலர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. சுவாரஸ்யமாக, இந்தியாவின் அரசியல் தலைமை சீனாவை பெயரிட்டு குற்றச்சாட்டு முன்வைக்கவில்லை. அதேபோல், சீன அதிபரும் லடாக் பிரச்னை குறித்து விவாதிக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலியாவிற்கு நோ சொல்லிவிட்டு சீனாவுடன் உறவை மேம்படுத்தவே வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இரண்டாவதாக, ரஷ்யா இதுவரை மலபார் பயிற்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த முறை தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தற்போது, ரஷ்யா-சீனா இடையிலான பந்தம் வலுவடைந்து வருவதால், ரஷ்யாவுடனான இந்தியாவின் அன்பான உறவில் சிக்கல் ஏற்பட்டுவிடும்.

மூன்றாவதாக, குவாட் சீரமைப்புக்கான ஆஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டை இந்தியா முழுமையாக நம்பவில்லை. மலபார் எக்ஸ் 2007' இல் ஆஸ்திரேலியா பங்கேற்பது குறித்து சீனா ஆட்சேபனை தெரிவித்திருந்தது. அப்போது பேசிய ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இது ஒரு ஒன் ஆஃப்' என்றும், ஆஸ்திரேலியா தேவையில்லாமல் பங்கேற்காது என்றும் தெரிவித்திருந்தார். இத்தகைய ஆஸ்திரேலியாவின் எண்ணம் இந்தியாவை கண்டிப்பாக யோசிக்க தான் வைக்கும்.

பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ள மலபார் கடற்படை பயிற்சிக்கு ஆஸ்திரேலியா அழைக்கப்படுமா இல்லாயை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்‌.

ABOUT THE AUTHOR

...view details