இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறுகையில், "லடாக்கின் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை சீனா குறைத்து வருகிறது. ஆனால், சீனா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரையும் கனரக ஆயுதங்களையும் விலக்கினால் மட்டுமே இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரும்" என்று கூறப்பட்டுள்ளது.
லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் நிலவிவருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளும் தத்தமது ராணுவத்தினரை அங்கு பெருந்திரளாகக் குவித்துள்ளதால், போர் பதற்றம் நிலவி வருகிறது.