ஒடிசாவிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில், சனிக்கிழமை இரவு, அக்னி 2 ஏவுகணையில் இரவு நேரத் தாக்குதல் துல்லியத்தைப் பரிசோதிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இரவு நேரத்தில் ஒரு ஏவுகணையைச் சோதிப்பது இதுவே முதல்முறை என்றும் அக்னி-2வின் இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார்.
20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி 2 ஏவுகணை ஆயிரம் கிலோ வெடிபொருள்களைத் தாங்கிச் செல்லும் ஆற்றலுடையது. மேலும், அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லும் ஆற்றலுடைய இந்த ஏவுகணை சுமார் 200 கிலோ மீட்டர் வரைத் தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்டது.