தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எதிரியின் ரேடாரை துவம்சம் செய்யும் ’ருத்ரம் ஏவுகணை’ சோதனை வெற்றி! - எதிரியின் ரேடாரை துவம்சம் செய்யும் ரூத்ரம்

டெல்லி: எதிரி நாடுகளின் ரேடார்களை அழிக்கும் தன்மை கொண்ட ருத்ரம் ஏவுகணையின் பரிசோதனை இன்று (அக்.09) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

issile
issile

By

Published : Oct 9, 2020, 6:18 PM IST

இந்திய ராணுவத்தை பலப்படுத்த அவ்வப்போது புதிய ஏவுகணைகள், கருவிகளைத் தயாரித்து வழங்கி வரும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதிய முயற்சியாக அதிக திறன்கொண்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை ஒன்றைத் தயாரித்துள்ளது. இதற்கு, ’ருத்ரம் 1’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த ஏவுகணை காலை 10.30 மணியளவில் பலசோர் கடற்கரையிலிருந்து சுகோய் - 30 என்ற விமானத்தின் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை விரைவில் இந்திய விமான படையின் சுகோய் ரகப் போர் விமானங்களுடன் பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இது எதிரி நாடுகளின் கண்காணிப்பு ரேடார்கள், டிராக்கிங் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை அழிப்பதற்காக வானிலிருந்து ஏவப்படும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ அலுவலர்களுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து டவீட் செய்துள்ளார்.

அதில், "இந்திய விமானப்படைக்காக @DRDO_India உருவாக்கிய இந்தியாவின் முதல் உள்நாட்டு கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை(ருத்ரம் -1) இன்று பாலசூர் ஐ.டி.ஆர் பகுதியில் சோதனையிடப்பட்டது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை மேற்கொண்ட டிஆர்டிஓ மற்றும் பிற பங்குதாரர்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details