இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, கரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்க வெளியுறவுத் துறை முனைப்புக் காட்டிவருகிறது.
முதல்கட்டமாக சீனாவிடமிருந்து ஐந்தரை லட்சம் ரேபிட் கிட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. பின்னர் இந்தியா முழுவதும் மாநில வாரியாக இந்த ரேபிட் கிட்கள் பிரித்து அளிக்கப்படும்.