புதிய ரக போயிங்-777 விமானம் அடுத்த வாரம் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் 30, ஜூலை 30 ஆகிய தேதிகளில் இந்த விமானம் வரவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விமானம் வருவதில் தாமதம் நேர்ந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு விமானமும், இந்த வருட இறுதியில் மற்றொரு விமானமும் வந்தடையும் என போயிங் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. இதற்காக ஏர் இந்திய விமானப்படை, பாதுகாப்பு படை ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த அலுவலர்கள் கொண்ட குழு ஒன்று அமெரிக்கா சென்றுள்ளது.
விமானத்தின் சிறப்பம்சங்கள்:
இந்த வி.வி.ஐ.பி விமானம் பிரதமர், குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் பயணம் செய்யும் விமானமாகும். புதிதாக வரப்போகும் விமானம், பிரதமரின் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.