தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கார்கில் போரின் வெற்றியின் 21ஆவது ஆண்டு... ராணுவ வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி! - kargil war

டெல்லி: கார்கில் போரின் வெற்றியின் 21ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, கார்கில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கார்கில் போர்  பிரதமர் நரேந்திர மோடி  கார்கில் போர் வெற்றி தினம்  பிரதமர் மோடி  பிரதமர் நரேந்திர மோடி  கார்கில் வெற்றி தினம்  kargil war victory  kargil war  prime minister narendra modi
கார்கில் போரின் வெற்றியின் 21ஆவது ஆண்டு

By

Published : Jul 26, 2020, 11:00 AM IST

இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவினர். பயங்கரவாதிகளை அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடிக்க ஆப்ரேஷன் விஜய்யை இந்திய ராணுவம் செயல்படுத்தியது. இதன்விளைவாக உயரமான மலைத்தொடர்களில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விரட்டியடித்ததோடு, 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்போரில் இந்தியா வெற்றியைப் பெற்றது. இந்தப்போரில் மரமணடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அந்தவகையில், இன்று (ஜூலை 26) கடைபிடிக்கப்பட்ட வெற்றி தினத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், எதிரிகளை எதிர்த்துப் போராடிய இந்தியப் படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் மட்டுமல்லாது அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 1999ஆம் ஆண்டு நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நமது ஆயுதப்படைகளின் தைரியத்தையும் உறுதியையும் நினைவில் கொள்கிறோம். அவர்களின் வீரம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில், "கார்கில் போரில், எல்லாவற்றையும் அர்ப்பணித்து இந்தியாவைப் பாதுகாத்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் ஜெய் ஹிந்த்" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், கார்கில் வெற்றி நாள் என்பது இந்தியாவின் பெருமை. உறுதியான தலைமைத்துவத்தின் அடையாளமாகும். கார்கிலில் உள்ள உயரமான சிகரங்களுக்கு சென்று எதிரிகளை விரட்டியடித்து மூவர்ணக்கொடியை அங்கு இந்திய ராணுவ வீரர்கள் அசைத்தனர். தாய்நாட்டைப் பாதுகாக்க தன்னுயிரை அர்ப்பணித்த இந்தியாவின் மாவீரர்களைப் பற்றி நாடு பெருமிதம் கொள்கிறது" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஜெ.பி. நட்டா, "கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு முழு தேசமும் எப்பொழுதும் நன்றி செலுத்தும்" இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:67ஆவது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

ABOUT THE AUTHOR

...view details