தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவில் உச்சத்தில் கரோனா! ஒரே நாளில் 90 ஆயிரம் பேர் பாதிப்பு

By

Published : Sep 6, 2020, 2:41 PM IST

டெல்லி : நேற்று (செப்.05) மட்டும் 90 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811ஆக உயர்ந்துள்ளது‌.

கரோனா
கரோனா

இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 80 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கரோனாவைக் கட்டுபடுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 811ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 626ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 80 ஆயிரத்து 865 ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்

அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 83 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தில் கரோனா பாதிப்பு நான்கு லட்சத்து 87 ஆயிரமாக உள்ளது. இதுவரை மொத்தமாக நான்கு கோடியே 88 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 10 லட்சத்து 92 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details