தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 19, 2020, 2:54 PM IST

ETV Bharat / bharat

நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்த 20 லட்சம் பேர்!

டெல்லி: நாட்டில் கரோனாவிலிருந்து 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் விகிதம் 73.64 ஆக அதிகரித்துள்ளது.

Covid 19
Covid 19

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரத்து 531 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அது குறித்த தகவல் பின்வருமாறு:

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை/நாட்டில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை - 64 ஆயிரத்து 531 / 27 லட்சத்து 67 ஆயிரத்து 273

உயிரிழந்தோர் எண்ணிக்கை / நாட்டில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை - 1092 / 52 ஆயிரத்து 889

இந்தியாவில் கரோனா இறப்பு விகிதம் 1.91 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இதுவரை 20 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் விகிதம் 73.64 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த 11 நாள்களில் இந்தியாவில் 7 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மொத்தம் மூன்று கோடியே 17 லட்சத்து 42 ஆயிரத்து 782 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் நீடிக்கின்றன. கடந்த 10 நாள்களாக தினமும் 50,000-க்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், உலகளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது இந்த இரு நாடுகளைவிட இந்தியாவில்தான் அதிகம் பதிவாகிவருகிறது.

இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு நாளை விவாதம்

ABOUT THE AUTHOR

...view details