டெல்லி:காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியா மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டிற்குத் தடைவிதித்துள்ளது. அதுமட்டுமின்றி, அது தொடர்பான பல நெகிழிப் பொருள்களையும் தடைவிதித்துள்ளது.
இந்த நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டிற்கு மாற்றாகவும் பல்வேறு இயற்கை முறை பொருள்களை வழக்கத்திற்கு கொண்டுவந்துள்ளது. இதில் வெற்றியும் பெற்றுள்ளது. தொடர்ந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியால் உண்டாகும் தீமைகள், அதற்கு மாற்று வழிகள் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.