அமெரிக்காவின் துணைச்செயலாளர் ஸ்டீபன் பீகன் தொடங்கிவைத்த தொலைபேசி மாநாட்டில் வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ஹர்ஷ் ஸ்ரீரிங்க்ளா பங்கேற்றார். அமெரிக்கா வழிநடத்திய இந்த வீடியோ மாநாட்டில் கோவிட்-19 வைரஸை எதிர்கொள்ளும் வழிகளை விவாதிக்க ஒரு ஒருங்கிணைந்த இந்தோ-பசிபிக் முன்முயற்சியாக, ஆஸ்திரேலியா, கொரியக் குடியரசு, வியட்நாம், நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மூத்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கோவிட்-19 வைரஸ் பரவலின் தற்போதைய நிலவரம் குறித்த மதிப்பீடுகள் மற்றும் பரவலை தடுக்க மேற்கொள்ளப்படும் பிராந்திய மற்றும் உலகளாவிய முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வழிகள் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
வெளியுறவு அமைச்சகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுவதன்படி “பிரதமரின் தலைமையின் கீழ், தேசிய அளவிலும், பிராந்திய ரீதியாகவும் இந்தியா எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சகச் செயலாளர் ஹர்ஷ் ஸ்ரீரிங்க்ளா சுருக்கமாக எடுத்துரைத்தார்.
தனது முன்னோக்கு பார்வைகளை கூட்டாளி நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளவும், இந்த சவாலை எதிர்கொள்ள இணைந்து செயல்படவும் இந்தியாவிற்கு இருக்கும் விருப்பத்தை அவர் வெளிப்படித்தினார்” இந்த தொலைபேசி மாநாடு ஒவ்வொரு வாரமும் நடைபெற உள்ளது.
இதில் தடுப்புமருந்தை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பு, வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கின்ற குடிமக்களின் அரை கூவல், உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உதவி புரிவது, உலகப்பொருளாதாரத்தின் மேல் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கட்டுப்படுத்துவது போன்ற சிக்கல்கள் விவாதிக்கப்படும்.
இதே நாளில், கோவிட்-19 பற்றி சீனாவின் வழிநடத்தலில் நடைபெற்ற தொலைபேசி மாநாட்டில் இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அலுவலர்கள் பங்குபெற்றுள்ளனர். தொற்றுநோயின் மைய்யப்பகுதியான வூஹான் மாகாணத்தில் எந்த ஒரு புதிய கொரோனா பாதிப்பும் வரவில்லை என சீனா இந்த வாரம் அறிவித்து, உலகம் முழுவதும் மக்களிடையே நம்பிக்கையை பரவச்செய்துள்ளது.
தெற்கு ஆசியா நாடுகளின் முதன்மை அரசாங்க தலைவர்கள் பங்குபெற்று மார்ச் 15 நடைபெற்ற வீடியோ மாநாட்டில் சில திட்டங்கள் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டன. (பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு தூதராக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தினார்).