தமிழ்நாடு

tamil nadu

'இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வலியுறத்துவோம்'

By

Published : Feb 17, 2020, 1:53 PM IST

புதுச்சேரி: இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

in-supreme-court we will-file-review-petition on reservation-cm-narayanaswamy
முதலமைச்சர் நாராயணசாமி

அரசுப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதை தடுப்பது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது போன்றவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் நமச்சிவாயம், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் ஆகியோர் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மத்திய அரசை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதை தடுப்பது அடிப்படை ஜனநாயக உரிமையை பறிப்பதாகும். இடஒதுக்கீடு கொள்கையை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும், என்றார்.

முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க:'மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இட ஒதுக்கீடு!' - தமிழ்நாட்டு தலைவர்களை உஷார்படுத்தும் கி. வீரமணி

ABOUT THE AUTHOR

...view details