ராஜஸ்தான் மாநிலத்தில் முதலைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக இளம் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனால், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏ-களை திரும்ப ஏற்றுக்கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அசோக் கெலாட், "அது கட்சியின் தலைமை எடுக்கும் முடிவை பொறுத்து. கட்சி தலைமை அவர்களை மன்னித்தால், நான் அவர்களை ஏற்றுக்கொள்வேன்.
கட்சி தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. அதனால்தான் மத்திய அமைச்சரவை, காங்கிரஸ் தேசிய மற்றும் மாநில தலைவர், முதலமைச்சர் என பல பதவிகளை என்னை நம்பி அளித்தனர். நான் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றிவருகிறேன், இதைத் தாண்டி நான் என்ன செய்ய முடியும்?