தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐசிஎம்ஆர் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல் என்ன சொல்கிறது? - ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு 17 நாள்களுக்கு பிறகு கரோனா அறிகுறிகள் தென்படாத நோயாளிகள் பணிக்கு திரும்பலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்

By

Published : Jul 21, 2020, 8:29 PM IST

துணிக்கடையில் பணிபுரியும் 40 வயது தக்க ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால், அவருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் கரோனா சோதனை மேற்கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொண்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

முதலில், அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்தது. ஏழு நாள்களுக்கு பிறகு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. நான்கு வாரங்கள் ஆன பிறகும் கூட, கடையின் உரிமையாளர் அவரை பணியில் மீண்டும் அமர வைக்க மறுக்கிறார். ஒரு மாதமாக பணிக்கு செல்லாததால் அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கடினங்கள் இருப்பதாக அவர் கவலை தெரிவிக்கிறார். இதே நிலைமைதான் வீட்டில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இதேபோல் எண்ணிலடங்காதவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டால் ஒரு மாதத்திற்கு மேலாக அவர் பணிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. கரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழ் இல்லையெனில் குணமடைந்தோரை பணியில் சேர்த்துக் கொள்ள உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவர் எம்.வி. ராவ் கூறுகையில், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தென்படாமல் இருந்தால் 17 நாள்களுக்கு பிறகு அவர்கள் பணிக்கு திரும்பலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 நாள்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்

  • பாதிக்கப்பட்ட 85 விழுக்காட்டினரிடம் அறிகுறிகள் தென்படுவதில்லை. அவர்களுக்கு தெரியாமலேயே கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைகின்றனர்.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருக்க வலியுறுத்தப்படுகிறது.
  • தனிமைப்படுத்திக் கொள்வதற்கு வீட்டில் வசதிகள் இல்லையெனில் அரசு மையங்களில் சேரலாம்.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 10 நாள்கள் வரை தனிமையில் இருக்க வேண்டும். காய்ச்சல், இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருப்பின் அடுத்த ஏழு நாள்களும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • குறிப்பிட்ட காலம் வரை அறிகுறிகள் தென்படவில்லை எனில் அவர்கள் குணமடைந்தவர்கள் என கருத வேண்டும்.
  • 17 நாள்களுக்கு பிறகு அவர்கள் பணிக்கு திரும்பலாம்.

இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: அமர்நாத் யாத்திரை ரத்து!

ABOUT THE AUTHOR

...view details