தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2020, 6:39 PM IST

ETV Bharat / bharat

இரண்டு நாள்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் - ஐ.சி.எம்.ஆர்.

டெல்லி: உரிய தர ஆய்வுகள் மேற்கொண்டு நிலவரத்தை தெரிவிக்கும் வரையில் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியுள்ளது.

ICMR
ICMR

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் லவ் அகர்வால், ஐ.சி.எம்.ஆர். அமைப்பின் தலைவர் ரமன் கங்காதர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தனர்.

அப்போது, பல மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஐ.சி.எம்.ஆர், கருவிகளின் தர ஆய்வுகள் மேற்கொண்டு அதன் நிலவரத்தை இரண்டு நாள்களில் அளிக்கவுள்ளது. அதுவரை அனைத்து மாநிலங்களும் இரண்டு நாள்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவியை பயன்படுத்த வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், 35 ஆயிரத்து 852 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரத்து 601 கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 252 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவால் 590 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நோய் தடுப்பு பணியில் 1.24 கோடி பேர் பணியமர்த்தப்பட்டுளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா நேரத்தில் மலேரியாவுடன் போராடும் ஜிம்பாவே

ABOUT THE AUTHOR

...view details