புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கான ஏப்ரல் மாதம் தாக்கல் செய்ய வேண்டிய 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் தாமதமானதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே காரணம் என்று குற்றஞ்சாட்டினார்.
இதனை மறுக்கும் விதமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியதாவது, "உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைப்பதில் எவ்வித தாமதமும் செய்யப்படவில்லை. பட்ஜெட் மதிப்பீட்டை உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைக்கும் கோப்பு மே 7ஆம் தேதி தான் துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு அரசால் சமர்ப்பிக்கப்பட்டது. நிதித்துறையிலிருந்து தேவையான விளக்கம் பெற்ற பிறகு மே 13ஆம் தேதியன்று பட்ஜெட் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது