தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் நான்கு பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு தீயிட்டு எரித்துக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீதான வழக்கை விரைந்து விசாரித்து அவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.
தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருப்தி தேசாய் கைது - தெலங்கானாவில் திருப்தி தேசாய் கைது
ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாயை காவலர்கள் கைது செய்தனர்.
![தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருப்தி தேசாய் கைது Trupti Desai detained from outside Telangana CM’s residence](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5263860-thumbnail-3x2-tr.jpg)
Trupti Desai detained from outside Telangana CM’s residence
இந்த நிலையில் பூமாதா அமைப்பின் நிறுவன தலைவரும் பெண் சமூக செயற்பாட்டாளருமான திருப்தி தேசாய், தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தார்.
தெலங்கானா முதலமைச்சர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற திருப்தி தேசாய் தடுத்து நிறுத்தப்பட்ட காட்சி
இதையும் படிங்க: அவனுங்கள எங்ககிட்ட விடுங்க! - காயத்ரி ஆவேசம்