ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைதுசெய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் ஹைதராபாத் காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 12ஆம் தேதி, இந்த என்கவுன்டர் தொடர்பான வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிம் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையில் மூன்று பேர் விசாரணை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்நிலையில், இறுதி அறிக்கையைத் தாக்கல்செய்ய இந்த ஆணையத்திற்கு ஆறு மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.