மத்தியப் பிரதேச மாநிலம், போபாலைச் சேர்ந்த 23 வயதான இளம் ஒருவர் அங்குள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'எனது 25 வயதான கணவர் நான் பலமுறை கூறியும் முகச்சவரம் செய்யவே இல்லை. குளிப்பதுமில்லை. மேலும் குளிக்காமலும், முகச்சவரம் செய்யாமலும், வாசனைத் திரவியங்களை மட்டும் உபயோகித்துக் கொண்டு தன்மீதுள்ள துர்நாற்றத்தை போக்குகிறார்.
எனவே இதுபோல் நடந்து கொள்ளும் கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத்தர வேண்டும்' என தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த போபால் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.சந்த், முதற்கட்டமாக 6 மாதங்கள், பிரிந்து வாழுமாறும், இருவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.