தமிழ்நாடு

tamil nadu

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்ட கம்யூனிஸ்டுகள்!

By

Published : Jan 11, 2020, 3:41 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு பிரதமர் செல்வதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டினர்!
பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் காட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டினர்!

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பழமையின் சின்னமாக உள்ள பழைய நாணய கட்டடம், பெல்வெடாா் இல்லம், மெட்காஃப் இல்லம், விக்டோரியா நினைவு மண்டபம் ஆகிய 4 பாரம்பரிய கட்டடங்களை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டும், #Go_Back_Modi என பதாகைகளுடனும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க...துணை வேந்தருக்கு சாதகமாகக் காவல்துறை நடந்துகொள்கிறது - மாணவர் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details