தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2020, 11:54 PM IST

ETV Bharat / bharat

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி - இந்தியா எவ்வாறு லாபம் பெறும்?

கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்து இந்தியா எவ்வாறு மீளும் என்பது குறித்து சர்வதேச வணிகத்துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் டாக்டர் ஹிரன்மொய் ராய் விளக்கமளித்துள்ளார்.

இந்தியா எவ்வாறு லாபம் பெறும்
இந்தியா எவ்வாறு லாபம் பெறும்

கச்சா எண்ணெய் விலை சரிவில் இருந்து இந்தியா எவ்வாறு மீளும்?

கச்சா எண்ணெய்யின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வரும் நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலை குறையும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக பல பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் ஏற்பட்ட இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் வர்த்தகம் பின்னடைவைச் சந்திக்கிறது. மேலும் இந்த நிலைமை சரியாக ஆறு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் ஆகலாம்.

ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலையானது முப்பது சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 31.02 டாலராக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு இதுவே மிக குறைவான விலை. அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 27 சதவீதம் குறைந்து தற்போது 30 டாலராக உள்ளது.

இந்த அதிரடி சரிவுக்கு என்ன காரணம்?

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா மற்றும் ரஷ்யாவின் ஒப்பந்தம் காரணமாக இந்த விலைக் குறைவு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமெங்கும் ஏற்பட்ட பொருளாதார நிலையைச் சரி செய்ய பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான (ஒபிஇசி) இந்த விலை குறைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஒபிஇசி எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு கூடுதலாக 1.5 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க ஒப்புக்கொண்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட உலக பொருளாதார நிலையைச் சரிசெய்ய இதே முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இதுவே மிகக்குறைந்த விலை மாற்றம்.

கச்சா எண்ணெய் உற்பத்தி சரிவேற்றமாக காணப்படுகிறது மற்றும் அமெரிக்கா, கனடா, பிரேசில், நார்வே ஆகிய நாடுகளில் உற்பத்தி அதிகரிப்பு மேலும் சீனாவில் இறக்குமதி குறைந்ததால் அதிகப்படியான எண்ணெய் விற்பனைக்கு வருகிறது.

இந்தியா இதில் எவ்வாறு பயனடைகிறது ?

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஜனவரி இறுதி மாதத்திலிருந்து 4 ரூபாய் லிட்டருக்கு குறைந்துள்ளது. மேலும் இந்த கச்சா எண்ணெய் விலை சரிவு, எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களாகிய இந்தியன் ஆயில், BPCL , HPCL பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில எரிபொருள் விற்பனையாளர்கள் தங்கள் உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சர்வதேச நிறுவனங்களுடன் விலை மதிப்பை ஒப்பிட்டுப்பார்க்க குறைந்தது 15 நாள்கள் தேவைப்படும். எனவே உள்நாட்டு எரிபொருள் விலை உண்மையான நிலைமையை அறிய இன்னும் ஒரு வாரமாகும்.

இந்தியா 85 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. அதனால் இந்த எரிபொருள் விலை குறைவு, இந்தியாவிற்கு நல்ல ஆதாயமே.

கச்சா எண்ணெய் டாலரின் விலையில் ஒரு யூனிட் வீழ்ச்சி இந்தியாவின் இறக்குமதி மசோதாவின் படி 3000 கோடி ரூபாய் குறைகிறது. மேலும் 45 பீப்பாய் கச்சா எண்ணெய் விலையால், நம் நாட்டிற்கு 2 பில்லியன் டாலர் சேமிக்க உதவுகிறது. அதாவது 14 ஆயிரம் கோடி ரூபாய் லாபம். கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீதம் குறைப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 மடங்கு (பிபிஸ்) உயர்வு அடைகிறது.

(எழுதியவர் டாக்டர் ஹிரன்மொய் ராய், யுபிஇஎஸ், ஸ்கூல் ஆப் பிசினஸில் ஆற்றல் பொருளாதாரம் கற்பிப்பவர். மேலும் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வணிகத்துறையின் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் )

(மறுப்பு: மேலே வெளிப்படுத்தப்பட்ட கருத்துகள் முழுக்க முழுக்க ஆசிரியரின் கருத்துகள் மற்றும் இது ஈடிவி பாரத் நிர்வாகத்தின் படைப்பல்ல. எந்தவொரு முதலீடு செய்வதற்கும் முன் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களின் அறிவுரை கேட்கும்படி ஈடிவி பாரத் அறிவுறுத்துகிறது)

இதையும் படிங்க: பெருத்த அடி வாங்கும் இந்தியப் பங்குச்சந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details