தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 19, 2019, 2:29 PM IST

Updated : Jul 19, 2019, 3:57 PM IST

ETV Bharat / bharat

5 கோடி போதாதுன்னா 30 கோடி ஓகேவா! கர்நாடகாவில் களைகட்டும் குதிரை பேரம்

பெங்களூரு: ஆளும் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க பாஜகவினர் கோடிக்கணக்கில் பேரம் பேசிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் குதிரைபேரம்

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மதியத்துக்குள் நடத்த அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் வார்த்தைப் போர் நிகழ்ந்துவந்தது.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் கவுடா, "எனக்கு ரூ.5 கோடி வழங்க பாஜவினர் முயன்றனர். ஆனால் நான் வாங்க மறுத்தேன். பின்னர், ரூ.30 கோடி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், சட்டப்பேரவை மதியம் மூன்று மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநர் அளித்த கெடு நிறைவடைந்த நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்திக்க ராஜ்பவன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி தோல்வியைத் தழுவி குமாரசாமி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என அரசியல் வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

Last Updated : Jul 19, 2019, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details