கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பதவி வகித்த கமல்நாத்துடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக இளந்தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா தனது அதிருப்பதி சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இதையடுத்து கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்தது, பாஜகவின் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தது.
இந்நிலையில், ஜோதிராதித்தியா சிந்தியா பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாகவும், இதில் ஜோதிராதித்திய சிந்தியாவுக்கு கேபினெட் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.