இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டுத் தொடரில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “லடாக்கில் சீனாவுடன் நடந்துவரும் எல்லைப் பிரச்னைகளில், கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் நிற்கும்போது இந்திய வீரர்கள் தைரியமாக தங்கள் கடமைகளை நிறைவேற்றிவருகின்றனர்.
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்கும் ராணுவப் படையினருக்குப் பின்னால் நாடு உறுதியாக நிற்கிறது என்ற செய்தியை நாடாளுமன்றம் ஒற்றுமையாக உறுதியளிக்கும்.
இரு அவைகளிலும் பல்வேறு விஷயங்கள் குறித்த கலந்துரையாடல்களுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளின்போது முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.