மே 3ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் ஹாண்ட்வாரா பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரரகள், ஒரு காவல் அலுவலர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 6ஆம் தேதி இந்திய ராணுவம் சார்பாக அவந்திபோராவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் காஷ்மீர் தலைவர் ரியால் நைக்கோ உள்பட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ரியாஸ் நைக்கோவுக்கு நடத்தப்பட்ட இரங்கல் கூட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவரும், சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவருமான சையத் சாலாவுதீன் பங்கேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.