இமாச்சலப் பிரதேசத்தின் சேரி கியுண்ட் கிராமத்தைச் சேர்ந்த நிதி டோக்ரா(11) செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு நிமிடத்தில் 35 வெவ்வேறு ஆசனங்களைச் செய்து யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில்,அகில இந்திய யோகா கூட்டமைப்பு (ABYM) சார்பாக மெய்நிகர் போட்டி நடைபெற்றது. இதில் நிதி டோக்ரா கலந்துகொண்டு 45 நிமிடங்கள் பிரணவ் ஆசனம் செய்து உலக சாதனை படைத்தார். மேலும், அவர் யோகா ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.
7 ஆம் வகுப்பு படித்து வரும் நிதிக்கு சிறுவயதிலிருந்தே யோகா மீது விருப்பம் இருந்ததையடுத்து, அவரது தந்தை சஷி குமாருடன் வீட்டில் யோகா கற்றுக் கொண்டுள்ளார். அவரது தந்தை சஷி குமார் கூறுகையில், "தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, நிதிக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.